கிணத்துக்கடவில் கழிவுநீர் கால்வாய் கட்ட நிலம் தானம் செய்தவருக்கு குவியும் பாராட்டு!

கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிவுநீர் கால்வாய் அமைக்க நிலம் தானம் செய்த ரஞ்சனி என்பவருக்கு, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் கட்ட நிலம் தானம் செய்தவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதூர் ஊராட்சியில் அண்ணா நகர் முதல் காந்திநகர் வரை உள்ள 700 மீட்டருக்கு கழிவுநீர் கால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்காக, அப்பகுதி சேர்ந்த சுப்பாராவ் என்பவரது மனைவி, ரஞ்சனி ஊராட்சி நிர்வாகத்திற்கு தங்களது நிலத்தை தானம் செய்தார்.

இதனிடையே, ரஞ்சனி தானம் செய்த நிலத்தில் தற்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.



இந்நிலையில், வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணிகண்டாபுரம் பகுதியில், கழிவுநீர் கால்வாய் கட்ட நிலம் தானம் செய்தவருக்கு பாராட்டு விழா, குப்பைகளை எடுக்க ஆறு லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட டிராக்டர் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் தமிழ் புத்தாண்டு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.



ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாஷா ஆகியோர் கலந்து கொண்டு நிலம் தானம் செய்த நபருக்கும், இதற்கு உதவியாக இருந்த ஊர் மக்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.



மேலும் பல ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையை ஏற்று கழிவு நீர் கால்வாய் கட்டிய ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் சால்வை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணம்மாள், அசோக்குமார், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், பாரதிநகர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...