கோவை மதுக்கரையில் போட்டோ ஸ்டூடியோ கதவை உடைத்து கேமரா திருட்டு!

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த குணசேகரன், 20ஆண்டுகளாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது கடையின் ஷட்டரை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான கேமராவை மர்ம நபர்கள் திருட்டிச் சென்றனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: மதுக்கரையில் போட்டோ ஸ்டூடியோ கதவை உடைத்து கேமரா திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மதுக்கரை குவாரி ஆபிஸ் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் 20 ஆண்டுகளாக அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இன்று காலையில் வந்து பார்த்த போது, கடையின் முன் பக்க ஷட்டரை கியாஸ் கட்டிங் மூலம் வெட்டி திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, ரூ.2 லட்சம் மதிப்பிலான கேமரா திருடப்பட்டதும், உள்ளே மிளகாய் பொடியைத் தூவிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலையில் மர்ம நபர்கள் கியாஸ் கட்டிங் மூலம் ஷட்டரை உடைத்து, உள்ளே நுழைந்து சிசிடிவி கேமராவை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும் குணசேகரின் கடையின் அருகே உள்ள இளையராஜா என்பவரது, பைனான்ஸ் நிறுவனத்தின் ஷட்டரையும் மர்ம நபர்கள் வெட்ட முயன்றதும், ஆனால் ஷட்டர் கதவு சுவருடன் இணைக்கப்பட்டிருந்ததால், அங்கேயும் மிளகாய் பொடியைத் தூவி விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...