தாராபுரம் வந்த சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதம் - பொதுமக்கள் தரிசனம்

தாராபுரத்தில் வி.எச்.பி கிராம கோயில் பூசாரிகள் பேரவையில் சார்பில் அழைத்துவரப்பட்ட சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதத்திற்கு, பக்தர்கள் அபிஷேகம் நடத்திய வழிபாடு செய்தனர்.


தாராபுரம்: தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பாக தாராபுரத்திற்கு சமயபுரம் மாரியம்மன் சக்தி ரதம் அழைத்து வரப்பட்டது.

தாராபுரம் நாடார் தெருவில் உள்ள பழையூர் புதூர் பெரிய காளியம்மன் கோவில் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் முன்பு சமயபுரம் மாரியம்மன் சிலை வைக்கப்பட்டது.

அப்போது, பக்தர்கள் தாங்களாகவே அம்மனுக்கு மஞ்சள்நீர், பால், தயிர், இளநீர் உள்பட 10 விதமான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் உள்ள சகல பிரச்சினைகளும், தோஷங்களும் நீங்கி சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் திருப்பூர் கோட்ட அமைப்பாளர் சின்ன குமரவேல், கோவில் பூசாரி துர்க்கேசன், ரத பூசாரிகள் பாபு, சங்கர், துரை உள்பட பக்தர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Newsletter

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...