உடுமலை அமராவதி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கான இளஞ்சூடு ஏற்றும் விழா

உடுமலைப்பேட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2023-2024ஆம் ஆண்டு கரும்பு அரவையை தொடங்க பாயிலர்களை இளஞ்சூடு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் சண்முகவேலு உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


திருப்பூர்: அமராவதி சர்க்கரை ஆலையில் அரவைக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை நிறுவப்பட்டு சுமார் 60 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்நிலையில் 2023-2024ஆம் ஆண்டு கரும்பு அரவைக்கான பாயிலர்களை இளஞ்சூடு ஏற்றும் நிகழ்ச்சி இன்று ஆலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன், விவசாயிகள் ஆலை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



அப்போது கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகிகளை சூழ்ந்து கொண்ட விவசாயிகள், இந்த ஆலை திடீரென அரவையின் போது பழுதாகி விடுகிறது. இதனால் கரும்பு அறுவடை செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அரவை துவங்கியவுடன் ஆலை எந்த தங்கு தடையும் இன்றி இயங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த ஆலை நிர்வாகிகள், 60 ஆண்டுகளுக்கு மேலாக பழைய உபகரணங்களை கொண்டு இந்த ஆலை இயங்கி வருகிறது. எப்பொழுது எது பழுதடையும் என்பது தெரியாமல் பணியாற்றுவதாக தெரிவித்தனர்.

முடிந்தவரை தங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுத்து இந்த ஆலை நிற்காமல் இயங்க உறுதுணையாக இருப்பதாக விவசாயிகளுக்கு உறுதி அளித்தனர்.

வருகின்ற 21ஆம் தேதி நடப்பு ஆண்டிற்கான கரும்பு அரவை துவங்கும் என அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...