பழனி தீர்த்தக்காவடி பக்தர்களுக்கு பாதபூஜை - கவுண்டம்பாளையம் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு!

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து பழனிக்கு தீர்த்தக்காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்தில் மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கையோடு பாத பூஜை செய்து பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.



பல்லடம்: பழனி தீர்த்தக்காவடி பக்தர்களுக்கு பாதபூஜை செய்து கவுண்டம்பாளையம் கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து பன்னிரண்டார் தீர்த்தக்காவடி குழுவின் சார்பில்114 தீர்த்தக் காவடியுடன் 11 நாட்கள் பாதயாத்திரையாக பெருந்துறை, ஊத்துக்குளி வழியாக பல்லடம் அருகே கவுண்டம்பாளையம் கிராமத்திற்கு வந்தடைந்தனர். தீர்த்த காவடி உடன் பாதயாத்திரை வந்த பக்தர்களுக்கு கவுண்டம்பாளையம் ஊர் மக்கள், மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் பாத பூஜை செய்து வரவேற்பு அளித்தனர்.



கவுண்டம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் வரை கோமாளி வேடமணிந்து, நடனம் ஆடியபடி பக்தர்களை ஊர்மக்கள் அழைத்துச் சென்றனர். இரவு மாகாளியம்மன் கோவிலில் தீர்த்த காவடிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது. ஓய்வுக்காக கவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்தில் இரவு தங்கினர்.



இன்று மீண்டும் தீர்த்தக்காவடிகளுடன் தாராபுரம் வழியாக சித்திரை 1ஆம் தேதி பழனி முருகன் கோவிலை சென்றடையும்படி பாதயாத்திரையை பக்தர்கள் தொடங்கினர். 114 தீர்த்தக்காவடியுடன் பக்தர்கள் வரிசையாக பாதயாத்திரை வந்த நிகழ்வு காண்போரின் கண்களை கவர்ந்தது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...