பால் விலை உயர்த்தாததைக் கண்டித்து உடுமலையில் விவசாயிகள் நூதன போராட்டம்!

உடுமலையில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. மாடுகளுக்கான உலர் தீவனம், அடர் தீவனம் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. ஆனால் பால் விலை உயர்த்துவதில் அலட்சியம் காட்டப்படுவதை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


திருப்பூர்: உடுமலையில் பால் விலை உயர்த்தாததைக் கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாள் முழுவதும் பசுவிடமிருந்து பாலைக் கறக்காமல் கன்றுக்கு மட்டும் கொடுத்து நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, விவசாயம் சார்ந்த உபதொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காத போது கால்நடை வளர்ப்பு கைகொடுக்கும். ஆனால் சமீப காலங்களாகக் கால்நடை வளர்ப்பிலும் வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாடுகளுக்கான உலர் தீவனம், அடர் தீவனம் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. ஆனால் பால் விலை உயர்த்துவதில் அலட்சியம் காட்டப்படுகிறது. பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும்.

கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும், மானிய விலையில் கால்நடைத் தீவனங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை ரோட்டில் கொட்டி போராட்டம் என பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனாலும் பயனில்லாத நிலையே உள்ளது. எனவே அரசுத்துறைகளைப் போல ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி ஒருநாள் மட்டும் மாட்டுப் பாலை கன்றுகளுக்கும், சொந்தப் பயன்பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் விவசாயிகளின் அருமை மற்றவர்களுக்குத் தெரியும். இந்த போராட்டம் பல நாட்கள் தொடர்ந்தால் என்ன ஆகும் என்பதை உணர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...