பல்லடம் அருகே வேலைக்கு ஆள் அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி - வடமாநில கும்பல் மீது புகார்!

பல்லடம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் மூர்த்தி என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு ஆள் அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்க ஆள் அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட வடமாநில கும்பல் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருந்தொழுவு கிராமத்தில் வசித்து வருபவர் மூர்த்தி. இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட ரிக் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.



இவரிடம் 30 தொழிலாளர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலில் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி இவருக்கு ஒரிசாவில் இருந்து தொடர்பு கொண்ட நபர் ஒருவர் போர்வெல் வேலை தெரிந்த ஆட்கள் உள்ளார்கள் என கூறியுள்ளார். மேலும், உங்களுக்கு ஆட்கள் தேவை என்றால் அனுப்பி வைக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மூர்த்தியும் ஐந்து நபர்களை மட்டும் அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கு 2000 ரூபாய் உணவுக்கு மட்டும் பணம் அனுப்புமாறு பேசிய வட மாநில கும்பலுக்கு ஆன்லைன் மூலம் 2000 ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார்.



இந்நிலையில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி ஒரிசாவில் இருந்து ஐந்து வட மாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு புறப்பட்டு விட்டனர் எனவும் அவருடைய ஆதார் கார்டு மற்றும் புகைப்படங்களையும் whatsapp மூலம் அனுப்பி உள்ளனர்.

மேலும் திருப்பூர் அருகே பேருந்து மூலம் பெருமாநல்லூர் வந்தடைந்து விட்டதாகவும் பேருந்து ஓட்டுனருக்கு நபர் ஒருவருக்கு 5000 வீதம் ஐந்து பேருக்கு 18000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே ஆட்களை இறக்கி விடுவோம் இல்லையெனில் கேரளாவுக்கு அனுப்பி விடுவோம் என கூறியதால் மீண்டும் பணம் அனுப்பியுள்ளார்.

பணம் அனுப்பிய அடுத்த ஐந்து நிமிடத்தில் வட மாநில கும்பல் மற்றும் ஓட்டுனரின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் சந்தேகம் அடைந்த மூர்த்தி ரிக் உரிமையாளர்களின் வாட்ஸ் அப் குழுவில் இது குறித்து தகவல் பகிர்ந்துள்ளார். இதுபோன்று திருச்செங்கோடு, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரி உரிமையாளர்களிடம் வடமாநில கும்பல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.



இந்நிலையில் வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் வடமாநில கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட ரிக் உரிமையாளர் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் மூர்த்தி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இதுபோன்று வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக வரும் அலைபேசி தொடர்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் ஆட்களை நேரில் பார்த்த பிறகு பணத்தை கொடுக்குமாறும் மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...