உடுமலை பைபாஸில் இணைப்பு சாலை துண்டிப்பு - வாகன ஓட்டிகள் அவதி!

உடுமலையில், பிரதான சாலைகளை இணைக்கும் பகுதியில், மழை நீர் வடிகால் பணிக்காக பாலம் இடிக்கப்பட்டு தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படாமல் 7 மாதமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்ட பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிறுத்தம் அருகே, பொள்ளாச்சி சாலையையும், பைபாஸ் சாலையையும் இணைக்கும் வகையில், சாலை அமைக்கப்பட்டுள்ளது. பழனிசாலை, பொள்ளாச்சி சாலையில் வரும் வாகனங்கள் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனைக்கு செல்லும் பேருந்துகளுக்கு பிரதான வழித்தடமாக இருந்தது.

கடந்த, ஏழு மாதத்திற்கு முன், இப்பகுதியில் மழை நீர் வடிகால் துார்வாரும் பணியின் போது, மழை நீர் வடிகால் மீதிருந்த பாலம் அகற்றப்பட்டதோடு, மழை நீர் வடிகாலும் இடிக்கப்பட்டது. இதனால் பைபாஸ் சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை இணைக்கும் வழித்தடம் துண்டிக்கப்பட்டது.



அதற்கு பின், கட்டட கழிவுகள் அகற்றப்படாமலும், மழை நீர் வடிகால் பாலம் கட்டப்படாமலும் உள்ளது. இதனால், இரு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.



கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட இவ்வழியாக வந்த வாலிபர் ஓருவர் மழைநீர் வடிகாலுக்கு தோண்டப்பட்ட குழியில் விழுந்து காயம் அடைந்தார். எனவே, நகராட்சி அதிகாரிகள், கட்டட கழிவுகளை அகற்றி, பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...