மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.78 கோடிக்கு பருத்தி விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி!

திருப்பூர் அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற பருத்திக்கான மறைமுக ஏலத்தில், விவசாயிகள் கொண்டு வந்த 2,438.16 குவிண்டால் பருத்தியானது. ஒரு கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 550 ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


திருப்பூர்: மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.1.78 கோடிக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த 785 விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதனிடையே, பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல், ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மூலனூரில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.



இந்நிலையில், வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8,328-கும், குறைந்தபட்சவிலை ரூ.6,700-கும் சராசரி விலை ரூ.7,550ற்கும் விற்பனையானது. இந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பருத்தியின் மொத்த அளவு 7,909 மூட்டைகளாகும்.

மொத்தம் 2438.16 குவிண்டால் பருத்தியானது, ஒரு கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், 28 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றதாகவும் திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் (பொறுப்பு) கண்ணன் தெரிவித்தார்.

இந்த ஏலத்திற்கான ஏற்பாடுகளை மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...