சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் - கோவை சவுத் ரோட்டரி கிளப் நிதியுதவி

தமிழகத்தில் சர்க்கரை நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சவுத் வழங்கியது. இந்தக் காசோலை இதயங்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.


கோவை: தமிழகம் முழுவதும்‌ சர்க்கரை நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இன்சுலின் மருந்து மற்றும் அதற்கான உபகரணங்கள், இதயங்கள் அறக்கட்டளை சார்பில் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏழை, எளிய குழந்தைகளை சர்க்கரை நோயிலிருந்து மீட்டெடுக்கும் வகையிலான நிகழ்ச்சி ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சவுத் சார்பில் கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கோவை மருத்துவ கல்லூரி அருகே நடைபெற்றது.



அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் வகையில் இன்சுலின் மருந்துகளுக்கான 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இதயங்கள் அறக்கட்டளைக்கு ரோட்டரி க்ளப் ஆப் கோயம்புத்தூர் சவுத் நிர்வாகிகள் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இதயங்கள்‌ அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன், ரோட்டரி மூலம் மேற்கொள்ளப்பட்ட இவ்வுதவிக்கு நன்றி. இன்சுலின் தேவைப்படும் 70 குழந்தைகளுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் ரோட்டரி சார்பில் உதவி அளிக்கப்பட உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கவர்னர் ராஜ்மோகன் நாயர் ரோட்டரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...