தரம் உயர்த்தப்பட்ட காங்கேயம் அரசு மருத்துவமனை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதற்கான பெயர்ப் பலகையை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். மேலும், ரூ. 12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரச மருத்துவமனை சமீபத்தில் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.



இதனை தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை பெயர் பலகையை திறந்து வைத்தார்.



மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதால், ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை அப்போது நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, காங்கேயம் வட்டம் சாவடிப்பாளையத்தில் 48 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தையும், அவிநாசி ஊராட்சிக்கு உட்பட்ட நம்பியம்பாளையம் 30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் தாயம் பாளையம் பகுதியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் என மொத்தம் 1.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியின்போது மாநில செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...