புனித வெள்ளி அனுசரிப்பு - சிலுவையை சுமந்தபடி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

புனித வெள்ளியையொட்டி, கோவையிலும் பல்வேறு இடங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது. உக்கடம் அருகே உள்ள புனித செபஸ்டியார் ஆலய மக்கள் இன்று சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொண்டனர்.


கோவை: கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் கணத்த நாளாக அனுசரிக்கப்படும் புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயேசுவை சிலுவையில் அறைந்த நாளாக அனுசரிக்கப்படும் இந்த நாளை கிறிஸ்துவர்கள் அனைவரும் சோக நாளாக அனுசரிக்கின்றனர்.



இன்றிலிருந்து மூன்றாம் நாள் இயேசு உயிர்தெழுந்த நாளாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். புனித வெள்ளி தினமான இன்று கிறிஸ்தவர்கள் பலரும் சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொள்வர். அதன்படி, கோவையிலும் பல்வேறு இடங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக உக்கடம் அருகே உள்ள புனித செபஸ்டியார் ஆலய மக்கள் இன்று சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொண்டனர்.



பெரியக்கடை வீதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் இருந்து சிலுவையை சுமந்தபடி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...