மதுக்கரை அருகே கார் மீது லாரி மோதி விபத்து - கணவன், மனைவி காயம்!

கோவை மதுக்கரை அருகே கேட்டரிங் உரிமையாளர் சிவதாஸ் தனது மனைவியுடன் காரில் சென்ற போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளான நிலையில், இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மதுக்கரை அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ்(61). இவரது மனைவி நாகமணி (50). சிவதாஸ் அதே பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை சிவதாஸ் தனது மனைவியுடன் காரில் சென்றுள்ளார். வாகனம் போடிபாளையம் பிரிவு அருகே வந்தபோது சிவதாஸ் வண்டியை திருப்ப முயற்சித்தார். அப்போது, எதிரே கேரளாவை நோக்கி வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் சாலையோரம் இருந்த 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கணவன், மனைவி 2 பேரும் சிக்கி படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக துடியலூர் யூனிட்டை சேர்ந்த பேரூர் சப் டிவிஷன் ஊர்க்காவல் படையினர் காரில் இருந்த கணவன், மனைவியை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து சிவதாஸ் மற்றும் அவரது மனைவி நாகமணியை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்து மதுக்கரை போலீசார் விரைந்து வந்து, லாரியை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...