வால்பாறை சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா - காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 71வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால் காவடி, பறவை காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

வால்பாறை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 71வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று சுப்பிரமணியசாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



மேலும் நல்லகாத்து பாலம் பகுதியில் இருந்து 10 க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராம மக்கள் சார்பாக பக்தர்கள் 131 பால்குட தீர்த்தம் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



மேலும் ஏராளமான பக்தர்கள், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பால் காவடி மற்றும் பறவை காவடி சுமந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வரை ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.



இந்த நிகழ்வில், சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...