உடுமலை பகுதியில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அழைப்பு

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், வியாபார நோக்கத்தை தவிர்த்து சொந்த தேவைக்காக மண் எடுக்க விண்ணப்பிக்கலாம் என வேளாண்மைத்துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை பகுதிகளில் உள்ள குளங்களில் மண் எடுக்க வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குத் தென்னை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இது தவிர நெல், வாழை, கரும்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல விதமான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.



இந்நிலையில் சமீப காலங்களாக அதிக மகசூலைக் கருத்தில் கொண்டு விவசாயத்திற்கு அதிகளவில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் மண் மலட்டுத் தன்மையடைந்து வருகிறது. இந்த பிரச்சினையிலிருந்து மண்வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இயற்கை விவசாயம் மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.

குளங்களில் தேங்கும் வளம் மிகுந்த வண்டல் மண்ணை எடுத்து வந்து நிலங்களில் போடுவது மண் வளத்தை மீட்டெடுக்க மிகச் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. அத்துடன் ஏரி, குளங்களில் அதிகப்படியாகத் தேங்கும் வண்டல் மண்ணை தூர் வாருவதால் நீர்த்தேக்கப் பரப்பு அதிகரிக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க ஆண்டுதோறும் அனுமதி வழங்கப்படுகிறது.



ஆரம்ப கட்டத்தில் மண் எடுக்க வருவாய்த்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் விவசாயிகள் அல்லாதோர் அதிகளவில் மண் எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகளின் நிலம் அமைந்துள்ள கிராமம், நிலத்தின் அளவு, வகைப்பாடு மற்றும் கடந்த 2 ஆண்டுகளில் வண்டல் மண் எடுக்கவில்லை என்ற சான்று பெற்று வேளாண்துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் சிட்டா. ஆதார் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். அத்துடன் தரைமட்ட மேல் பகுதியிலிருந்து ஒரு மீட்டர் ஆழம் வரை மட்டுமே வண்டல் மண் எடுப்போம். கரைகளை சேதப்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட பாதையை மட்டுமே பயன்படுத்தி நீர்நிலைகளை சேதப்படுத்தாமல் மண் எடுப்போம்.

வியாபார நோக்கத்தில் பயன்படுத்த மாட்டோம் என்பன உள்ளிட்ட உறுதிமொழியுடன் கூடிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்

விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு அருகிலுள்ள வண்டல் மண் எடுக்க வாய்ப்புள்ள குளத்தை தேர்வு செய்து குறிப்பிட வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரால் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும்.பின்னர் அந்தந்த குளங்களில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் என்று வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...