கோவை ஆலாந்துறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி!

கோவை மாவட்டம் ஆலாந்துறை பேரூராட்சி மற்றும் பிச்சனூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு 416 பயனாளிகளுக்கு ரூ.5.39கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கோவை: ஆலாந்துறை பேரூராட்சி மற்றும் பிச்சனூர் ஊராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, 416 பயனாளிகளுக்கு ரூ.5.39 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



பின்னர் இதைத் தொடர்ந்து ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், ரூ.4.17 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங்,

ஆலாந்துறை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ராமமூர்த்தி, பேரூராட்சி துணைத்தலைவர் மூர்த்தி, தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...