கோவை மருதமலை கோயிலில் வரும் ஏப்.5-ல் பங்குனி உத்திர திருவிழா - ஏற்பாடுகள் தீவிரம்!

மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தரிசனத்திற்காக நாளை முதல் 2 நாட்களுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


கோவை: வரும் ஏப்ரல் 5ஆம் தேதி மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது.

பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமியில் அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்நிலையில், கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை 2 நாட்கள் நடைபெற உள்ளது.

நாளை மறுநாள் அதிகாலை 6 மணிக்கு கோ பூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பால்குடம், பால் காவடிகள் மூலம் முருகப் பெருமானுக்கு மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள், காலை 8 மணிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னர் ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து, 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, பாலாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.

இதையடுத்து சுப்பிரமணியசாமி - வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் அர்த்த மண்டபத்தில் எழுந்தருள்கிறார். மாலை 6 மணிக்கு சாயரட்ச பூஜை, தங்க ரதத்தில் சுப்பிரமணிய சாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மலை மேல் செல்ல அனுமதி இல்லை.

அதற்கு பதிலாக மலைக்கோவில் செல்வதற்கு கோவில் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன் மூலம் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மருதமலை கோவில் துணை ஆணையர் ஹர்சினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...