எம்பி தேர்தலில் 40 தொகுதிகளை கைப்பற்ற பாடுபடுங்கள்..! - தாராபுரத்தில் திமுக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தாராபுரம் நகர ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகளுக்கான செயற்குழு கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிப் பெற்ற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் தாராபுரம் நகர ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகளுக்கான செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, தாராபுரம் தொகுதி தேர்தல் பார்வையாளர் மாநில நெசவாளர் அணி செயலாளர் நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கே எஸ் தனசேகர், மாநில மகளிரணி செயலாளர் சத்யா பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், தமிழக செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த முறையைபோல 40க்கு 39 என்ற உறுப்பினர்களைபோல் இல்லாமல் இந்த முறை நடப்பதற்கு 40 என்ற இலக்கை பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நமக்கெல்லாம் உத்தரவிட்டுள்ளார்.



அதன்படி, தாராபுரம் தொகுதி பொறுப்பாளராக மாநில நெசவாளர் அணி செயலாளர் பொள்ளாச்சி நாகராஜ் நியமிக்கப்பட்டு, அவர் தலைமையில் ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும் தவறாமல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தபட்சம் 20 சதவீதத்திற்கும் குறையாமல் உறுப்பினர்களை வரும் 20 நாட்களுக்குள் அந்தந்த பகுதி நகரச் செயலாளர், ஒன்றிய செயலாளர் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் தலைமையில் கிளைக் கழக உறுப்பினர்கள் கட்டாயமாக சேர்க்க நாளை முதல் தீவிரமாக ஈடுபட வேண்டும், என்றார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...