கொளுத்தும் கோடை வெயில் - கோவை குற்றால அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

. கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் பலரும் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர்வீச்சிகளுக்கு படையெடுத்து வரும் நிலையில், கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.


கோவை: கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



தமிழகத்தில் கோடைக்காலம் 2 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்ட நிலையில் மாநிலம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலிலிருந்து தப்பித்து கொள்ளவும், குளுமையை அனுபவிக்கவும், சுற்றுலாத்தலங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு அதிகளவில் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.



குறிப்பாக கோவையிலுள்ள சுற்றுலா தளமான கோவை குற்றால அருவிக்கு கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் இருந்தும் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் குற்றால அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.



மேலும் அருவியில் குளிக்கும் பயணிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...