திருப்பூரில் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கி தருவதாக கூறி 63 பேரிடம் ரூ.96 லட்சம் மோசடி - மூவர் கைது!

திருப்பூரில் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கி தருவதாக கூறி 63 பேரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த காண்டிராக்டர் கனகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்று தருவதாக கூறி 63 பேரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்த கட்டிட கான்ட்ராக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் அவினாசி நகரை சேர்ந்தவர் கனகராஜ் (44). கட்டிட கான்ட்ராக்டரான இவரது டிரைவர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த முருகன் (27). இவர்களது நண்பர் அவினாசியை சேர்ந்த பழனிசாமி (60) ஆகியோர் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கட்டிட கான்ட்டிராக்டரான கனகராஜ், திருமுருகன்பூண்டி நெருப்பெரிச்சல், கணக்கம்பாளையம் பகுதிகளில் அரசு சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு தலா 10 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி வந்துள்ளார்.

கனகராஜ் கட்டிட கான்ட்ராக்டர் என்பதால் அவரது வட்டாரத்தில் உள்ள பலரிடம் பணம் பெற்றுள்ளார். இதேபோல் அவரது நண்பர்களான பழனிச்சாமி மற்றும் முருகன் ஆகியோரும் அவர்களது பங்கிற்கு சிலரிடம் இருந்து அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்று தருவதாகக்கூறியும், அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறியும் லட்சக்கணக்கில் பணத்தை பெற்று கனகராஜிடம் கொடுத்துள்ளனர்.

இதற்கு அவரிடம் இருந்து கமிஷனும் பெற்று வந்துள்ளனர். மேலும், பணம் கொடுத்தவர்கள் நம்பும் வகையில் போலியாக ஒதுக்கீடு ஆணைகள் தயாரித்தும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இவ்வாறு பணம் கொடுத்தவர்கள் பல மாதங்கள் ஆகியும் வீடு கிடைக்காததால் இது குறித்து கனகராஜிடம் கேட்க தொடங்கியுள்ளனர். இதனால் கனகராஜ் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தலைமறைவாகி விட்டார்.

இதனால் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் இது குறித்து திருப்பூர் மாநகர போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இந்த புகார் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.



காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் திருப்பூரில் பதுங்கியிருந்த கனகராஜ் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த பழனிச்சாமி, முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது, கனகராஜ் மற்றும் பழனிச்சாமி, முருகன் ஆகிய 3 பேரும் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி திருப்பூர் பகுதிகளில் உள்ளவர்கள் பணத்தை கொடுத்துள்ளனர்.

தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்கும் வகையில் வீடு ஒதுக்கீடு கேட்டவர்களுக்கு போலியாக ஆணை தயாரித்து கொடுத்துள்ளனர். சுமார் 63 பேரிடம் ரூ.96 லட்சம் வரை மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கனகராஜூக்கு முகவர்களாக பழனிச்சாமியும், முருகனும் செயல்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களுக்கு வேறு ஏதேனும் சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...