கோவை அருகே டெம்போ மீது இரு சக்கரவாகனம் மோதி விபத்து - 11 வகுப்பு மாணவர் பலி!

கோவை துடியலூர் அடுத்துள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே சரக்கு ஏற்றி வந்த டெம்போ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 11ம் வகுப்பு மாணவர் பிரவீன் உயிரிழந்தார். இதுகுறித்து பி.என்.பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை கே.என்.ஜி.புதூரில் இருந்து ஹாலோபிளாக் கற்கள் ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று இன்று காலை மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

டெம்போவை சூர்யா என்பவர் ஓட்டிவந்துள்ளார். அவருடன் 2 வடமாநில தொழிலாளர்களும் இருந்துள்ளனர். அவர்கள் நரசிம்மநாயக்கபாளையம் ஜோதிகாலனி அருகே வரும்போது, அதேதிசையில் இருசக்கர வாகனத்தில் வந்த 11வகுப்பு மாணவர் பிரவீன் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ மீது மோதினார்.

அதில், டெம்போவிவின் முன்சக்கரத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்றது.



அப்போது சாலையை கடப்பதற்காக நின்றுகொண்டு இருந்த லாரி மீது மோதியதில் டெம்போ ஒரு சைடாக விழுந்தது. அப்பொது டெம்போவில் இருந்த ஹாலோபிளாக் கற்கள் அனைத்து சாலையில் கொட்டியது.



இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த மாணவர் பிரவீன் பலத்த காயம் அடைந்தார். டெம்போ ஓட்டுநர் மற்றும் வடமாநில வாலிபர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.

அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை சாய்பாபாகாலனியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்தும், கீழே விழுந்து கிடந்த ஹாலோபிளாக் கற்களை பொதுமக்களுடன் இணைந்து அப்புறப்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு வழி ஏற்படுத்தினர்.

இந்த விபத்தில் காயமடைந்த 11ம் வகுப்பு மாணவர் பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...