வால்பாறையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றும்படி கோரிக்கை!

வால்பாறையில் வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும், தூய்மை தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பணி நிரந்தரம் செய்வதோடு, ஊதிய உயர்வு வழங்ககோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி மூலம் பொது மக்களுக்கு பயன்பாடக்கூடிய வளர்ச்சி பணிகளை செய்துதர வலியுறுத்தி தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்ட கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஏஐடியுசி சங்க பொதுச்செயலாளர் மோகன் தலைமையில் வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தூய்மை தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பணி நிரந்தரம் செய்வதோடு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவான படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகியவற்றின் பணிகளை நிறைவு செய்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும், தொழில் வரி பிடித்து செய்து வரும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் தேவையான பணிகளை நகராட்சி மூலம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...