கோவையில் விவசாயிகளுக்கு உதவிய பார்க் குழுமம் - ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆட்சியரிடம் ஒப்படைப்பு!

கோவையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் SC/ST விவசாயிகளுக்கான பங்குத்தொகையாக ரூ. 2 லட்சத்தை பார்க் கல்வி குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி-யிடம் வழங்கப்பட்டது.


கோவை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல நூறு SC/ST விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள், மின்கல தெளிப்பான், வேளாண் உபகரணம், தார்ப்போலின் போன்ற உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதன் விலையில் ஒரு பகுதியை விவசாயிகள் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், இந்தப் பங்குத் தொகையை செலுத்த முடியாத விவசாயிகளின் சார்பாக ரூபாய் இரண்டு லட்சத்தை நன்கொடையாக பார் கல்வி குழுமம், கோவை ஆட்சியரிடம் வழங்கியது.

இதன் மூலம் 128 விவசாயிகள் பயன் பெறுவார்கள். இந்தத் தொகைக்கான காசோலையை பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் ஒப்படைத்தார்.

மேலும் இந்தத் திட்டத்திற்காக RAAC ரவீந்திரன் ரூபாய் 60 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது வேளாண்துறை இணை இயக்குநர் சஃபி அஹமத் உடனிருந்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...