கிணத்துக்கடவில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழை - 15,000 வாழை மரங்கள் சேதம்!

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் 15,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் வேதனையடைந்த விவசாயிகள், வேளாண் துறையினர் முறையாக கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவில் நேற்றைய தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 15,000 வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.



இதன் காரணமாக கிணத்துக்கடவு அருகேயுள்ள பொட்டையாண்டிபுறம்பு, கல்லாபுரம், சிங்கையன் புதூர் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட 15,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன.



தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் சொட்டுநீர் பாசனம் மூலம் வளர்த்து பராமரிக்கப்பட்டு வந்த வாழை மரங்கள் ஒரு மணி நேரம் வீசிய காற்றில் அடியோடு சாய்ந்ததைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



இந்நிலையில், வாழைத்தார்கள் இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யும் நேரத்தில் வாழை மரங்கள் சேதம் அடைந்திருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திருப்பதாகவும் எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...