பல்லடத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதல் - இரண்டு மாணவிகள் காயம்

பல்லடத்தில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற வேன் மீது சென்னையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 2 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்தனர்.


திருப்பூர்: பல்லடத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில், இரண்டு மாணவிகள் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30 மாணவ-மாணவிகள் இன்று பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றனர்.



வேன் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருமாள் கோவில் அருகே சென்றபோது சென்னையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு பல்லடம் நோக்கி வந்த லாரி பள்ளி வேன் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் வேனில் பயணித்த இரண்டு மாணவிகள் படுகாயமடைந்தனர்.

அருகிலிருந்தவர்கள் காயமடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் போக்குவரத்து சரிசெய்து விபத்து உண்டான லாரி ஓட்டுநர் ராஜா என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...