உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 41 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கல்

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அபெக்ஸ் ஸ்கில் டெவலப்மென்ட் கார்பரேசன் லிட் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு 240 மணி நேரம் வேலைவாய்ப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற உடுமலை அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த 41 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 41 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு "அபெக்ஸ் ஸ்கில் டெவலப்மென்ட் கார்பரேசன் லிட்" மூலம் கல்லூரி மாணவர்களுக்கு 240 மணி நேரம் வேலைவாய்ப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படிக்கும் 49 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில் 3 தனியார் நிறுவனங்கள் மூலம் 41 பேர் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கான ஊதியத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பணி நியமன ஆணையை நேர்முகத்தேர்வு ஒருங்கிணைப்பாளர் தினேஷ் முன்னிலையில் கல்லூரியின் முதல்வர் கல்யாணி வழங்கினார்.

கல்லூரியின் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல்துறைப் பேராசிரியர் கதிர்வேலு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...