கோவையில் பேசமறுத்த இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய கல்லூரி மாணவர் கைது!

கோவை சுந்தராபுரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் பேச மறுத்ததால், அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்று தலைமறைவான கல்லூரி மாணவரான ஸ்ரீராமை குறிச்சி அருகே போத்தனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே பேசமறுத்த இளம்பெண்ணை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஷானவாஸ். இவரது மகள் ரேஷ்மா (20). தனியார் கல்லூரியில் 2 ஆண்டுகள் படித்துள்ளார், மேலும் படிப்பை நிறுத்தி விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் கல்லூரியில் படித்த போது, அவரது வகுப்பில் படித்து வந்த குனியமுத்தூர் விநாயகர் வீதியை சேர்ந்த ஸ்ரீராம் (20) என்ற இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரேஷ்மா கல்லூரி படிப்பை நிறுத்தியதில் இருந்து சுமார் 10 மாதங்களாக ஸ்ரீராமிடம் பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இன்று வழக்கம்போல் ரேஷ்மா சுந்தராபுரம் டிராவல்ஸ் அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென அங்கு வந்த ஸ்ரீராம், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது முகத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது அவரது சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வருவதை கண்ட ஸ்ரீராம் அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போத்தனூர் போலீசார் இளம்பெண்ணை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தப்பிச்சென்ற கல்லூரி மாணவர் ஸ்ரீராமை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த மாணவர் ஶ்ரீராமை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...