கோவை வெள்ளலூரில் லாரி கிளினருக்கு கத்தி குத்து - இருவர் கைது!

கோவை வெள்ளலூரை சேர்ந்த லாரி கிளீனர் கோகுலகிருஷ்ணன் (23) பணம் கேட்டுக் கொடுக்காததால், ஆத்திரமடைந்த சர்புதீன் மற்றும் கிஷோர் ஆகிய இருவரும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: மதுகுடிக்க பணம் கொடுக்காததால் லாரி கிளீனரை கத்தியால் குத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (23). லாரி கிளீனராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தனது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மது போதையில் நடந்து சென்றதாக தெரிகிறது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சர்புதீன் (25), கிஷோர் (25), ஆகிய இருவரும் கோகுலகிருஷ்ணனை இடைமறித்து மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

ஆனால் கோகுலகிருஷ்ணன் பணம் கொடுக்க மறுத்ததால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சர்புதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோகுலகிருஷ்ணனை குத்தி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் அங்கிருந்த கோகுலகிருஷ்ணனின் நண்பர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார், வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சர்புதீன் மற்றும் கிஷோர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...