முன்விரோதம் காரணமாக கோவை மாநகராட்சி ஊழியருக்கு கத்திக்குத்து - 2 இளைஞர்கள் கைது!

தொண்டாமுத்தூரை சேர்ந்த மாநகராட்சி ஊழியரிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர், ஆத்திரமடைந்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நிலையில், திண்டுக்கலில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அருகே மாநகராட்சி ஊழியரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர்கள் இருவரை போலீசார் திண்டுக்கலில் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகன் சபரிநாதன் (23). இவர் கோவை மாநகராட்சி தெற்கில் குடிநீர் திறப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் குனியமுத்தூர் பி.கே.புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த 2 இளைஞர்கள் சபரிநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து சபரிநாதனை கத்தியால் குத்தினர். அதில், இடுப்பு, வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த சபரிநாதன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், முன்விரோதம் காரணமாக குடிபோதையில் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது.

மேலும், சபரிநாதனை கத்தியால் குத்தியது அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிறிஸ்டோபர், வினித் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கி இருந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...