உடுமலையில் நெடுஞ்சாலை புளியமரங்களில் அறுவடை பணிகள் தீவிரம்!

உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதியிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை சாலைகளின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான புளியமரங்களில் புளி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: உடுமலை பகுதியின் முக்கிய சாலைகளில் உள்ள புளியமரங்களில் புளி அறுவடை துவக்கம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதியிலுள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட பிரதான சாலைகள், கிராம இணைப்பு சாலைகளின் இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான புளியமரங்கள் உள்ளன.



ஆண்டுதோறும், பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அறுவடை சீசன் துவங்கும். புளியமரங்கள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, புளி, பறிப்பதற்கான ஏலம் விடப்படுகிறது. நடப்பாண்டு சீசன் துவங்கியுள்ள நிலையில், சாலையோர மரங்களில் அறுவடை தீவிரமடைந்துள்ளது.



கடந்தாண்டு, பருவமழை அதிகரித்ததால், காய் உருவாகும் சமயத்தில் பெய்த மழை காரணமாக, மகசூல் குறைந்தது. தற்போது சீசன் காரணமாக, வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. விதையுடன் கிலோ, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

புளியம் பழங்களை தரம் பிரித்து, விற்பனை செய்யும் போது கூடுதல் விலை கிடைக்கிறது. கிராமங்களில், இத்தகைய பணிகளில் பெண்கள் அதிகம் ஈடுபடுகின்றனர்.

பழத்திலுள்ள கொட்டை மற்றும் நார் ஆகியவற்றை பிரித்து, விற்பனைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...