ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிப்பு - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்!

ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை விதித்ததையும், எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததையும் கண்டித்தும் கோவையில் மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ராகுல்காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தொண்டாமுத்தூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிகள் இணைந்து காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை வழங்கியதைக் கண்டித்தும், எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான. எம்.என்.கந்தசாமி, முன்னாள் மேற்கு மன்ற தலைவர் சொக்கம்புதூர் கனகராஜ், மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...