கோவை அருகே மின்கம்பத்தை மோதி உடைத்த காட்டுயானை - மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ராவுத்துக்கொள்ளனூர் பகுதியில் மின் கம்பத்தில் மோதிய ஆண் காட்டுயானை ஒன்று மின்சாரம் பாய்ந்து பலியானது. கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்து ராவுத்துக்கொள்ளனூர் பகுதியில் இன்று அதிகாலை ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.



அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி வனப்பாதுகாவலர் செந்தில் தலைமையிலான பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இறந்து கிடந்த யானையை பரிசோதித்தனர்.



அதில், இன்று காலை சுமார் 7 மணி அளவில் உணவு தேடி வந்த ஆண் காட்டு யானை ஒன்று அவ்வழியாக சென்றபோது மின் கம்பத்தில் மோதி உள்ளது.



அப்போது மின்கம்பம் உடைந்து யானை மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை பரிதாபமாக பலியானது தெரியவந்தது.



இதையடுத்து, கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



மின்சாரம் தாக்கி காட்டு யானை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...