பொள்ளாச்சி ஜோதிலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பரிவார குடைகள் - திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை அன்பளிப்பு

பொள்ளாச்சி திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், 42 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்ட பரிவாரக் குடைகள், விசாலாட்சி- ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமிகள் திருவீதி உலா வருகையின் போது, ஐதீக முறையில் பயன்படுத்தப்படும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.



கோவை: பொள்ளாச்சி ஜோதி நகரில் அமைந்துள்ள விசாலாட்சி சமேதர் ஜோதிலிங்கேஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.



இக்கோவிலுக்கு பொள்ளாச்சி திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில், விசாலாட்சி- ஜோதிலிங்கேஸ்வரர் சுவாமிகள் திருவீதி உலா வருகையின் பொழுது பயன்படுத்தப்படும் பரிவாரக் குடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் ஆனைமலை ஆர்ஷ வித்யாபீடம் யூஜ்ய ஸ்ரீ ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை, சுவாமி விவேகாந்தா கலை நற்பணி மன்ற நிர்வாகிகள், மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரூ 42 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பரிவார குடைகளை கோயில் அர்ச்சர்கள்களிடம் வழங்கினர்.

பிரதோஷம், மற்றும் திருவிழா காலங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் திருவீதி உலா வரும்போது இந்த பரிவாரக் குடைகள் ஐதீக முறையில் பயன்படுத்தப்படும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...