கோவையில் செருப்புக் குடோனில் பயங்கர தீவிபத்து - பல லட்சம் ரூபாய் இழப்பு!

கோவை டவுன்ஹால் ஒப்பணைக்காரர் வீதியில் திவாக் பிரசாத் பாரிக் என்பவரின் செருப்பு கடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.


கோவை: கோவை ஆர்.எஸ். புரத்தை சேர்ந்தவர் திவாக் பிரசாத் பாரிக். இவர் கோவை டவுன்ஹால் ஒப்பணைக்காரர் வீதியில் சொந்தமாக விளையாட்டு வீரர்களுக்கான ஷூ மற்றும் உபகரணங்கள், செருப்பு கடை மற்றும் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இரவில் வியாபாரத்தை முடித்துவிட்டு தரைத்தளத்தில் உள்ள குடோனில் இவர் தூங்குவது வழக்கம்.

இந்த நிலையில், நேற்றிரவு இவர் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டிவிட்டு குடோனில் படுக்க சென்றார். அப்போது குடோனிலிருந்து புகை வெளியேறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், குடோனை விட்டு வெளியேறினார்.



அப்போது, குடோனில் தீ பற்றி மளமளவென எரிந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து உடனடியாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.



அதன் பேரில் சம்பவ இடத்துக்கு ஒரு தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



தீ கட்டுக்கடங்காமல் குடோனில் இருந்து செருப்பு கடைக்கும் பரவியது. இதனால் 3 மாடி கொண்ட கட்டிடம் முழுவதும் தீ பயங்கரமாக எரிந்தது. அதே கட்டிடத்தில் இருந்த கோல்டு கம்பெனி மற்றும் பைனான்ஸ் நிறுவனத்திலும் தீ பற்றியது.

இதனால் அங்கு கூடுதலாக மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

மேலும் அங்கு தண்ணீர் பீரங்கி வாகனம் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிளான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. சம்பவம் குறித்து பெரியகடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...