உடுமலை அருகே தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள் - இழப்பீடு வழங்க கோரிக்கை

உடுமலை அருகே 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதாக கோரியும், இழப்பீடு வழங்க கோரியும் விவசாயிகள் சங்கம் சார்பில் உடுமலை கோட்டாச்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே யானைகள் சேதப்படுத்திய தென்னை மரங்களுக்கு இழப்பிடு வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாச்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி நகர், பொன்னாளம்மன் சோலை, வளையபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.



இந்நிலையில் இன்று விளைநிலத்திலிருந்த 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அடியோடு சாய்த்து யானைகள் சேதப்படுத்தி உள்ளது.



இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வனப்பகுதியை ஓட்டிய கிராமங்களாக இருப்பதால் வனத்துறையினரிடம் பலமுறை யானைகளை விரட்ட கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.



இதனால் இன்று தோட்டத்தில் புகுந்த யானைகள் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் உடனே போர்க்கால அடிப்படையில் குழு அமைத்து சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், என்றனர்.

இதற்கிடையில் விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாச்சியர் ஜஸ்வந்த்கண்ணனிடம் இழப்பீடு வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...