உடுமலை பகுதியில் தெருநாய்களுக்கு கருத்தடை பணி தீவிரம்

உடுமலை நகராட்சியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படியும், விலங்கின் நல வாரிய வழிகாட்டுதலின்படியும், தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.



திருப்பூர்: உடுமலை நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படியும், விலங்கின் நல வாரிய வழிகாட்டுதலின்படியும், தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை இன்று முதல் தொடங்கி வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி வரை ராஜேந்திர ரோட்டில் உள்ள மாட்டுத் தொழுவம் பகுதியில் நடைபெற உள்ளது.



மேலும் உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் தினமும் தோராயமாக 75நாய்கள் பிடிக்கப்படுகிறது. நாய்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான 'ராஜேஸ்வரி கவுசலோ டிரஸ்ட் திருநெல்வேலி' என்ற அமைப்பு மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.



இம்முகாமில் தெரு நாய்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள செல்லப் பிராணிகளுக்கும் கருத்தடை செய்ய விரும்பினால் நகராட்சியை அணுகி தங்களது செல்லப் பிராணிகளுக்கு கருத்தடை செய்து கொள்ளலாம் என நகரமன்ற தலைவர் மத்தீன், நகராட்சி ஆணையர் சத்தியநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...