கோவையில் ரவுடிக்கு சரமாரி கத்திக்குத்து - தலைமறைவான மற்றொரு ரவுடிக்கு போலீஸ் வலை

கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் மதுபோதையில் ரவுடி வேலு என்பவரை, சரமாரி கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மற்றொரு பிரபல ரவுடி தக்காளி மாதவன் என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை தடாகம் சாலை கோவில்மேடு பகுதியை சேர்ந்த வேலு எனும் வேலுசாமி என்ற ரவுடி மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதேபோல் மற்றொரு பிரபல ரவுடியான கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தக்காளி மாதவன் என்பவர் மீது சுமார் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறவே ரவுடி வேலு உயிருக்கு பயந்து ஓடியுள்ளான்.



அப்போது வேலாண்டிபாளையம் அடுத்த கொண்டசாமி நாயுடு வீதி பகுதியில் ஓடிய வேலுவை சுற்றி வளைத்த தக்காளி மாதவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடியுள்ளான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சாய்பாபாகாலணி காவல்நிலைய போலீசார், குடல் சரிந்த நிலையில் உயிருக்கு போராடிய வேலுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து தப்பியோடிய பிரபல ரவுடி மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...