வால்பாறையில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனை கூட்டம்!

வால்பாறையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாணவர்களை கண்காணிக்க வேண்டும், அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குறித்து பேராசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வால்பாறையில் காவல்துறை சார்பில் போதை பொருள் விற்பனை தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆய்வாளர் கற்பகம் மற்றும் துணை ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வால்பாறை அரசு கல்லூரியில் போதை பொருட்கள் ஒழிப்பு, தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் இடையேயான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாணவ, மாணவிகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். தனிமையில் இருக்கும் மாணவர்களின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். படிப்பிலும், விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்த வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் கல்லூரி முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரியில் உள்ள அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...