வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை - வால்பாறையில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஆய்வு

வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் நீண்ட நாட்களாக வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோரிக்கை விடுத்த நிலையில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி லீலா அலெக்ஸ் சேடல் டேம் குடியிருப்பு பகுதி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.


கோவை: வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி ஆய்வு செய்தார். வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் 450-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக குடியிருப்பு பகுதிக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் வருவாய் துறையினர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்தனர்.



இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி லீலா அலெக்ஸ் இன்று சேடல் டேம் குடியிருப்பு பகுதி, அண்ணா நகர், ஜே ஜே நகர், சோலையார் அணை இடதுகரை, வலதுகரை காவல் நிலையம் உட்பட்ட அனைத்து பகுதிகளும் பட்டா வழங்குவதற்கு பெயர் மற்றும் விலாசங்களை ஆய்வு செய்தார்.



மேலும் சோலையார் அணை பகுதியில் பராமரிக்கப்பட்டுள்ள அணையின் மீன் வளர்ப்பு பகுதிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வு பணியின் போது வால்பாறை வட்டாச்சியர் ஜோதிபாசு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...