உடுமலை அருகே இலவச பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் மனு

உடுமலை அருகே லிங்கமநாயக்கன்புதூரில் 20 ஆண்டுகளாக சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், ஒரு வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட லிங்கமநாயக்கன்புதூரில் அருந்ததியர், போயர் மற்றும் வண்ணார் சமூகத்தினர் சுமார் 20 ஆண்டுகளாக சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், ஒவ்வொரு வீட்டில் இரண்டு,மூன்று குடும்பங்கள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.



எனவே இவர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை அணுகி பல்வேறு கால கட்டங்களில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு செய்துள்ளனர்.



மேலும் தொடர்ந்து உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் சென்று வட்டாட்சியர் கண்ணாமணியிடம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி இன்று மனு வழங்கினர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...