தாராபுரத்தில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் - நோய் பரவும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சுந்தரம் அக்ரஹாரம் தெருவில் ஹாஜியான திருமண மண்டபம் அருகில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தும், இதே நிலை தொடர்வதாக புகார் எழுந்துள்ளது.



திருப்பூர்: தாராபும், சுந்தரம் அக்ரஹாரம் தெருவில் ஹாஜியான திருமண்டபம் உள்ளது. இதன் அருகில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என்று தாராபுரம் நகராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.



இதையும் மீறி அப்பகுதி பொதுமக்கள் அதை அலட்சியப்படுத்தும் நோக்கில் அங்கு தினசரி குப்பைகளை கொட்டி வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் பலமுறை அப்பகுதி மக்களிடம் எடுத்துக் கூறியும் அது சிலர் கண்டு கொள்ளாமல் குப்பைகளை ரோட்டிலேயே வீசி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் காய்ச்சல் நோய் தொற்றுப் போன்ற பல இன்னல்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகின்றனர்.



நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வைத்துள்ள கேமராவில் பதிவாகியுள்ள குப்பைகள் கொட்டும் நபர்கள் மீது அபராதம் விதித்து மேற்கொண்டு குப்பையில் கொட்டாமல் இருப்பதற்கு வழிவகை செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...