வால்பாறையில் பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் இன்று திறப்பு!

வால்பாறையில் உள்ள அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் விதமாக சாலையோர சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் ஆணையாளர் பாலு உள்ளிட்டோர் மக்கள் பார்வைக்காக திறந்து வைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையோர சுவர்களில் வரையப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளின் படங்களை நகராட்சி தலைவர் இன்று திறந்து வைத்தார்.

வால்பாறை பகுதியில் பல்வேறு வன விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இதில் அறிய வகையான சிங்கவால் குரங்கு, மற்றும் இருவாச்சி பறவைகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் பறவைகள் மற்றும் விலங்குகளை பாதுகாக்க வன துறையினரும் NCF தன்னார்வலர்கள் இணைந்து ஆராய்ச்சி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

NCF தன்னார்வலர் நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வால்பாறையில் உள்ள வன விலங்குகள் மற்றும் பறவைகளை ஆராய்ச்சி செய்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.



பறவைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக வால்பாறை டவுன் பகுதியில் உள்ள சுவர்களில் பறவைகள் மற்றும் விலங்குகளை படம் வரையப்பட்டன. முதல் கட்டமாக நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் உள்ள சுவற்றில் அப்பகுதியில் வாழும் 38 பறவை மற்றும் விலங்குகள் படம் வரையப்பட்டன.



சுவர்களில் பறவையின் படமும் அதன் பெயரும் வரையப்பட்டுள்ளன.



இதனை இன்று நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் ஆணையாளர் பாலு மற்றும் மானாம்பள்ளி வனசரகர் மணிகண்டன் ஆகியோர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதனை அவ்வழியாக செல்லும் பொது மக்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் வரையப்பட்டுள்ளது.



இந்த நிகழ்வில் NCF தன்னார்வ நிறுவனர் திவ்யா, சங்கரராமன், கணேஷ், ரகுநாத், ஶ்ரீநிவாசன், அஷ்னி, சதிஷ் குமார், ஸ்டெல்லா, மூர்த்தி, பிரகாஷ், சுமதி, அகில், ஷாமா, பவித்ரா மற்றும் வரைபட கலைஞர் சர்டாஜ், மணாலி, மாதவன், மகாலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...