கோவையில் முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கல்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 8 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை மற்றும் மருத்துவப்படி ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆண்டிற்கான 8 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தலா ரூ.3,500 உதவித்தொகை மற்றும் 500 ரூபாய் மருத்துவப்படி பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி உடனிருந்தார்.



அதன்படி அஞானமணி, இராமலிங்கம், செல்வராசு, சாமியப்பன், நரசிம்மன், இருதய சாமி, கிருஷ்ணரால் மற்றும் அகூத்தரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு 01.04.202 முதல் திங்கள் தோறும் ரூ.3,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.4,000 வழங்கப்படும். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் மறைவுக்குப் பின்னர் இவர்களது மரபுரிமையர் என இவர்களால் குறிப்பிடப்பட்டுள்ள மரபுரிமையருக்கு நடைமுறையில் உள்ள விதிப்படி உரிய சான்றுகளின் அடிப்படையில் உதவித்தொகை ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 என ரூ.3000 எனும் வீதத்தில் திங்கள்தோறும் வழங்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் தமிழ்நாட்டிற்குள் எங்கும் சென்று வர இலவசப் பேருந்து பயணச் சலுகையும் வழங்கப்படுகின்றது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...