கோவையில் குடிக்க பணம் கொடுக்க மறுத்த மனைவி - விரக்தியில் குடிமகன் தற்கொலை!

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சசிதரன் என்பவர் மதுபோதைக்கு அடிமையானவர். மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் மனமுடைந்த அவர் சாணிப்படவுரைக் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதி சார்ந்தவர் சசிதரன் (வயது60). மது போதைக்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.

இந்த நிலையிலே இவர் சம்பவத்தன்று தனது மனைவியிடம் மது பருகுவதற்காக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால் அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சசிதரன் வீட்டில் இருந்த சாணி பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்துள்ளார்.

இதனை அறிந்த அவரது குடும்பத்தார், உடனடியாக சசீதரனை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சசிதரன் இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குடி குடியை கெடுக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், மது குடிக்க பணம் கிடைக்காததால் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிங்கநல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...