பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ - இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை!

கோவையில் இன்ஸ்டாகிராமில் பட்டாக்கத்தியுடன் வீடியோ வெளியிட்ட தமன்னா கைதானதை தொடர்ந்து, மாற்றம்பாளையத்தை சேர்ந்த கெளதம் என்ற இளைஞரை பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் சமீபத்தில் சத்திய பாண்டியன், கோகுல் என்ற இரண்டு ரவுடிகள் அடுத்தடுத்த நாளில் படுகொலை செய்யப்பட்டனர். கோகுல் நீதிமன்ற சாலையில் கொல்லப்பட்டார். ரவுடி சத்தியபாண்டியன் ஆவாரம்பாளையம் பகுதியில் துரத்தி துரத்தி வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையிலே கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ரவுடிகளின் கொலை பின்னணியில் உள்ள கொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் கைதான ரவுடிகளிடம் விசாரணை நடந்தன. விசாரணையில் சில ரவுடிகள் சமூக வலைதளங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டு வன்மம் கக்கியது தெரியவந்தது. இந்த நிலையில்,சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவோரை பிடிக்க, போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட டிக் டாக் ரவுடிகள் உட்பட, முதல் தேடுதல் வேட்டையில் 40க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையிலே பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்டிருந்த பெண் தமன்னா என்கிற வினோதினி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், கோவை மாற்றம்பாளையம் பகுதியைச் சார்ந்த கௌதம் என்ற இளைஞர், தமது சமூக வலைதள பக்கத்தில் பட்டாக்கத்தியுடன் வீடியோ பதிவிட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை பார்த்த போலீசார், இளைஞர் கௌதமை பிடித்துகுனியமுத்தூர் ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...