கோவையில் வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சி - வீட்டின் உரிமையாளரிடம் வசமாக சிக்கிய திருடன்!

கோவை சிங்கநல்லூரில் வீட்டில் நுழைந்து ரொக்கபணத்தை திருட முயன்ற சஞ்சய் ராஜ் என்பவரை, வீட்டின் உரிமையாளர் ஜீவானந்தம் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். காசாளராக பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர் தனது வீட்டின் அருகேஉறவினருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது வீட்டினுள் ஏதோ உருட்டல் சத்தம் கேட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்தபொழுது இளைஞர் ஒருவர் உலாவுவது தெரியவந்தது.

வீட்டில் பணம், மணி பர்ஸ், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாக அந்த நபர் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த நபரை உடன் பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் உதவியுடன் ஜீவானந்தம் கையும் களவுமாகப் பிடித்தார். இது தொடர்பாகசிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு அவர் புகார் அளித்தார்.

ஜீவானந்தம் தனது உறவினர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், வீட்டில் கொள்ளை அடிக்க முற்பட்ட நபர் சஞ்சய் ராஜ் என்பது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், சஞ்சய்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...