ஜல்லிக்கட்டு குறித்த ஆங்கில புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளரும், அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவ சேனாதிபதி ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக வைத்து எழுதிய Thunderous Run Bountiful Harvest எனும் ஆங்கில புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள் பெற்றுக் கொண்டனர்.


சென்னை: ஜல்லிக்கட்டு குறித்து கார்த்திகேய சிவ சேனாதிபதி எழுதிய Thunderous Run Bountiful Harvest என்ற ஆங்கில புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளரும், அயலக தமிழர் நல வாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாபதி ஜல்லிக்கட்டு விளையாட்டை ஆங்கிலத்தில் ஆவணப்படுத்தும் நோக்கில் "Thunderous Run Bountiful Harvest" என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட தமிழக ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் புத்தகத்தை எழுதிய கார்த்திகேய சிவ சேனாதிபதி பேசுகையில், 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் மெரினா புரட்சியை தொடர்ந்து நாங்கள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கட்டங்களில் சட்ட சிக்கலை தீர்க்க வாதிடும் போது குதிரை பந்தயத்திற்கு இருப்பது போல் ஆங்கிலத்தில் ஜல்லிக்கட்டை பற்றிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பதை உணர்ந்தோம். எனவே அப்போது அதை தொகுக்கும் முயற்சியில் இறங்கினோம். இதில் என்னுடன் ரோஜா முத்தையா, இயக்குனர் சுந்தர் மற்றும் கட்டிடக்கலை வல்லுநர் கார்த்திக் ஆகியோரின் முயற்சியின் விளைவாக அறிவியல் மற்றும் தொன்மையான பல விவரங்களை இந்த புத்தகத்தில் தொகுத்துள்ளோம், என்றார்.

நிகழ்ச்சியில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் பழ.செல்வகுமார், ரோஜா முத்தையா, நூலக இயக்குநர் சுந்தர்கணேசன், கட்டிடக்கலை வல்லுநர் கார்த்திக் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...