கோவையில் நாளை கல்விக் கடன் முகாம் - மாவட்ட நிர்வாகம் தகவல்

கோவை மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்விக் கடன் பெறுவதற்காக ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.


கோவை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்விக் கடன் உதவி பெறுவதற்கான முகாம் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் காலை10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்து கொண்டு கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் கிழ்கண்ட ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வர வேண்டும்.

1.பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 (மாணவர் மற்றும் பெற்றோர்) மற்றும் ஆதார் அட்டை(மாணவர் மற்றும் பெற்றோர்)

2. பான்கார்டு/பாஸ்போர்ட்/விசா நகல்

3. இருப்பிட சான்று

4.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி தாக்கல் செய்த படிவம்-16/16ஏ

5. தாசில்தாரிடமிருந்து சமீபத்தில் பெறப்பட்ட வருமான சான்றிதழ்

6. அரசு ஒதுக்கீடு மூலம் சேர்க்கை பெற்ற சான்று

7. SSLC HSC மற்றும் டிகிரி: மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள்

8. கல்லூரி/பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக்கான கடிதம்

9. கல்லூரி/பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட கட்டண விவர கடிதம்

10. கடைசி ஆறு மாதங்களுக்கு வரவு செலவு மேற்கொள்ளப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்.

ஆகியவை எடுத்து வந்து அணுகவும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...