கோவையில் நாளை கல்விக் கடன் முகாம் - மாவட்ட நிர்வாகம் தகவல்

கோவை மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்விக் கடன் பெறுவதற்காக ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.


கோவை: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்விக் கடன் உதவி பெறுவதற்கான முகாம் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் காலை10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்து கொண்டு கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் கிழ்கண்ட ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வர வேண்டும்.

1.பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 (மாணவர் மற்றும் பெற்றோர்) மற்றும் ஆதார் அட்டை(மாணவர் மற்றும் பெற்றோர்)

2. பான்கார்டு/பாஸ்போர்ட்/விசா நகல்

3. இருப்பிட சான்று

4.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி தாக்கல் செய்த படிவம்-16/16ஏ

5. தாசில்தாரிடமிருந்து சமீபத்தில் பெறப்பட்ட வருமான சான்றிதழ்

6. அரசு ஒதுக்கீடு மூலம் சேர்க்கை பெற்ற சான்று

7. SSLC HSC மற்றும் டிகிரி: மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள்

8. கல்லூரி/பல்கலைக்கழகத்தின் சேர்க்கைக்கான கடிதம்

9. கல்லூரி/பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட கட்டண விவர கடிதம்

10. கடைசி ஆறு மாதங்களுக்கு வரவு செலவு மேற்கொள்ளப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்.

ஆகியவை எடுத்து வந்து அணுகவும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...