கோவை ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26வது வார்டு கவுன்சிலர் மனு!

பீளமேடு அருகேயுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் சுரங்கப்பாதை அமைப்பது, PF திட்ட சாலை பணிகளை விரைவு படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.


கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியின் 26வது வார்டு உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சியின் 26 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சித்ரா வெள்ளியங்கிரி. இவர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.



அப்போது தங்களது வார்டில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பீளமேடு பகுதி 26வது வார்டுக்கு உட்பட்ட ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுரங்கப்பாதை வேண்டி பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இதேபோல், அந்த வார்டில் PF திட்ட சாலை பணிகள் நில எடுப்பு நடவடிக்கைக்கு பணிகளை வேகப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை நடைபெற்று வரும் மேம்பால பணிகளை வேகப்படுத்தி முடிக்க வேண்டும். சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நவீன கழிப்பறை அமைத்து தர வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...