வெள்ளகோவில் மதுக்கடைக்கு எதிர்ப்பு - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளிர்சாதன மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் மதுக்கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக்கடை செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 15 மாதங்களுக்கு முன்பு பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து அங்கிருந்த கடை அகற்றப்பட்டது.



இந்நிலையில் தற்போது அதேபகுதியில் நவீன குளிர்சாதன வசதியுடன் மதுக்கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், மதுக்கடை அமையும் இடத்தின் அருகே அரசு துவக்கப்பள்ளி, பேருந்து நிலையம், டிஆர் நகர் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், அந்த இடத்தில் மதுபானக்கடை அமைக்க கூடாது என வெள்ளகோவில் நகராட்சி 5வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வராஜ் தலைமையில் 50‌க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுங்கட்சியின் கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...